advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

ஜூன் 09, 2025 12:09 பிற்பகல் |

 

இந்தாண்டுக்கான குரூப் 4 அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதி 3,935 காலிப்பணியிடங்களுக்கு வெளியாகி, விண்ணப்பங்கள் மே 24 வரை பெறப்பட்டது. குருப் 4 தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் இத்தேர்வை எழுதலாம். இதனால் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக பேர் எழுதும் தேர்வாக குரூப் 4 உள்ளது.

கடந்த ஆண்டில் 9 ஆயிரத்திற்கு அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பபட்ட நிலையில், இந்தாண்டு 4 ஆயிரத்திற்கும் குறைவான இடங்களுக்கே அறிவிப்பு வெளியானது தேர்வர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் இந்தாண்டு தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியான பின்னர் கலந்தாய்வு தொடங்கும் வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement