நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
ஜூலை 19, 2025 5:59 முற்பகல் |
நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதும் குழந்தை இல்லாத பெண்கள் காந்திமதி அம்மனுக்கு 10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.
ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம் . அந்தவகையில் இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து 4-ம் திருவிழாவான 21-ம்தேதி மதியம் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 27-ம்தேதி மாலை ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
கருத்துக்கள்