advertisement

கடலூர் சிப்காட்டில் வெடித்து சிதறிய டேங்கர் -பரபரப்பு

மே 15, 2025 5:17 முற்பகல் |


 
கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் திடீரென வெடித்து சிதறியது. 

இதனால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்தது. இதனால், கண்எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ரசாயன நீர் புகுந்ததைக் கண்டித்து கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் டேங்கர் வெடித்ததுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement