advertisement

தூத்துக்குடி- கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது

மே 10, 2025 5:50 பிற்பகல் |

 

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர்  போலீசார் வெள்ளப்பட்டி செக்போஸ்ட் நூலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் பைக்கில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் வெள்ளப்பட்டி 25 வீடு மீனவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மரிய விக்டர் (19),  மைக்கேல் விஜிஸ்டன் (19) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 30 கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement