advertisement

அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம்  ரத்து.!

ஜூன் 17, 2025 9:36 முற்பகல் |

 

அகமதாபாத்-லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.

 ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப் பறக்க இருந்தது. இருப்பினும், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் இரண்டாவது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது இதுவாகும். தகவலின்படி, ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் AI-159 அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட இருந்தது.

மாலை 6.25 மணிக்கு லண்டனுக்கு அது வந்தடையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது. கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற இரண்டாவது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்தது இதுவாகும். கடந்த 36 மணி நேரத்தில், மொத்தம் 4 விமானங்களில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement