advertisement

தூத்துக்குடியில் வாஞ்சிநாதன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

ஜூன் 17, 2025 11:55 முற்பகல் |

இந்திய தேச விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவத் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சியின் சார்பாக இன்று  (17 ம் தேதி)  காலை 10: 30 மணி அளவில் மாநில அமைப்பு செயலாளர் செல்வசுந்தர் தலைமையில்  மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள வ உ சிதம்பரனார் சிலை அருகில் வைத்து நடைபெற்றது. 

மேலும் தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் அவர்களின் நினைவகத்தை அகற்றிட வேண்டும் . இதை இந்நாளில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம் என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தெரிவித்தார் .நிகழ்ச்சியில் மாநில பூஜாரிகள் பேரவை நிர்வாகி சாஸ்தா, இராமசுப்பு, சுந்தர், பால்முருகன், ஆறுமுகம் மற்றும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தேச பக்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement