2026ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் -நயினார் நாகேந்திரன் பேட்டி
ஜூன் 17, 2025 10:59 முற்பகல் |
பா.ஜ.க. மாநில தலைவர் 'நயினார் நாகேந்திரன்' அவர்கள், சென்னை கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
நயினார் நாகேந்திரன்:அப்போது அவர் தெரிவித்ததாவது,"விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.திருப்பரங்குன்றத்தில் எப்போது பதற்றமான சூழல் ஏற்பட்டதில்லை.முருகன் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்களுக்கான மாநாடு. முருகர் பக்தர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கலந்து கொள்ளலாம். நாங்கள் இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம். 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்