advertisement

இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கோவையை விட்டு வெளியேற உத்தரவு : திரும்ப பெற கோரிக்கை மனு

ஜூன் 17, 2025 4:40 முற்பகல் |

 

இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில நிர்வாகி  சூர்யா மீது கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்கள் 51 ஏ சட்டத்தினை பயன்படுத்தி கோவை மாநகரை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும்  கோரிக்கை  மனுவினை சமர்ப்பிக்க இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவுறுத்தியுள்ளார்

இதனை அடுத்து இந்து மக்கள் கட்சி மாவட்ட மகளிரணி நிர்வாகி பத்மபிரியா தலைமையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  வட்டாட்சியரிடம் நேற்று காலை 11 மணி அளவில் எங்களது கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.   நிகழ்ச்சியில் என்னோடு மாநில பூஜாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் சாஸ்தா ஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் அழகுராஜா, மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன், ஆலய பாதுகாப்பு பேரவை நிர்வாகி பரமசிவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement