advertisement

திருமண ஆசை காட்டி சின்னத்திரை நடிகை மோசடி..  ஓட்டல் அதிபர்  புகார்!

ஜூன் 17, 2025 5:29 முற்பகல் |

 

திருமண ஆசை காட்டி நகை, பணம் வாங்கி மோசடி செய்ததாக டி.வி. நடிகை மீது ஓட்டல் அதிபர் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் அதிபரான ராஜ் கண்ணன் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள சின்னத்திரை நடிகை ரிகானா பேகம், நண்பர் மூலம் எனக்கு அறிமுகமாகி தன்னுடன் நடப்பாகி பழகி வந்தார். அப்போது நடிகை ரிகானா பேகம்,தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறினார். ரிகானா பேகத்தை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தாய் கூறிய நிலையில் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம்.

அதன்பிறகு  நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதனால் அவர் கேட்ட நகை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து சுமார் ரூ.20 லட்சம் வரை அவருக்காக செலவு செய்தேன்.கடந்த ஆண்டு  ரிகானா பேகத்தை  தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன்.  அதன்பிறகுதான் அவர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அவருடன் தொடர்பில் இருப்பதும், திருமண ஆசை காட்டி என்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரிந்தது. ரிகானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் " என புகார் மனுவில் கூறியுள்ளார்.இதையடுத்து  பூந்தமல்லி போலீசார் ராஜ்கண்ணன் மற்றும் டி.வி. நடிகை ரிகானா பேகம் இருவருக்கும் சம்மன் அனுப்பி நாளை  ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement