அகமதாபாத் விமான விபத்து - நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்
கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் முதல் கேள்வியாக ” கூலி படத்தில் நீங்கள் நடித்து முடித்துளீர்கள்” படம் எப்போது வருகிறது படம் எப்படி வந்திருக்கிறது? என கேட்டனர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ” கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் வரும் ஆக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே, படக்குழு சொல்லிவிட்டதே” எனவும் பேசினார். அதனைத் தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்து குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கும் பதில் அளித்த அவர் ” விமான விபத்து செய்தியை கேட்டு எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று கடவுளை வேண்டுகொள்கிறேன்” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் நடித்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வருகிறது அந்த படம் குறித்து எதாவது அப்டேட் இருக்கிறதா? என கேட்டனர். அந்த கேள்விக்கும் பதில் அளித்த ரஜினிகாந்த் ” இப்போது ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிப்பு விறு விறுப்பாக நடந்துகொண்டு இருக்கிறது” எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கருத்துக்கள்