ராமநாதபுரம் மாவட்டத்தில் 51 பேருந்துகளுக்கான அனுமதி ஆணை-அமைச்சர் வழங்கல்
புதிய விரிவான மினி பஸ் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 51 பேருந்துகளுக்கான அனுமதி ஆணையினை தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார் .
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத்துறையின் சார்பாக புதிய விரிவான மினி பஸ் திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தில் புதிய பேருந்துகள் இயக்குவதற்கான ஆணையினை வழங்கி தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று போக்குவரத்து துறையின் சார்பில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை துவக்கி வைத்ததையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மினி பஸ் இயக்குவதற்கான தேர்வு செய்யப்பட்ட 51 புதிய பேருந்துகள் இயக்குவதற்கு உரிமம் ஆணை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 07 புதிய பேருந்துகள் இயக்க உரிமம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உரிமம் பெற்றவர்களுக்கு ஆணை வழங்கப்படும்.
இதன் நோக்கம் கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பயணம் செய்து வர ஏதுவாக இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக சின்ன கிராமங்களில் பெரிய பேருந்துகள் சென்று வர முடியாத இடங்களுக்கு இதுபோன்ற மினி பஸ் மிக பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்கள் பயன்பெற்ற வேண்டுமென தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் , ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் , ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் , வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி ,
உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்