advertisement

காவல் நிலையத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜர்

ஜூன் 17, 2025 9:04 முற்பகல் |

காதல் தொடர்பான பிரச்சினையில் சிறுவன் கடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. பூவை ஜெகன் மூர்த்தி, இன்று காவல்நிலையத்தில் நேரில் வந்தார்.

முன்னதாக, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதன்பேரில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்றம் அவருக்கு கட்டுப்பாடுகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அதற்கிணங்கவே, ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகி, போலீசாரின் விசாரணைக்கு நேரில் பதிலளிக்கத் தொடங்கியுள்ளார். அவரது பதில்கள் மற்றும் பங்கு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement