திருநெல்வேலியிலிருந்து நவதிருப்பதிக்கு பேருந்து சேவை - பக்தர்களுக்கு அறிவிப்பு
திருநெல்வேலியிலிருந்து நவதிருப்பதிக்கு பேருந்து சேவை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புரட்டாசி மாதம் சனிக் கிழமை நாட்களான 21.09.2024, 28.09.2024, 05.10.2024 மற்றும் 12.10.2024 ஆகிய நாட்களில் நவதிருப்பதி திருக்கோவில்களுக்கு பக்தர்கள் சென்று, வர சிறப்பு சேவை பேருந்துகளை இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த சிறப்பு சேவை பேருந்துகள், மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 07.00 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவதிருப்பதி திருத்தலங்களான,
1) திருவைகுண்டம் 2) நத்தம் 3) திருப்புளியங்குடி 4) இரட்டைத்திருப்பதி(2) 5) பெருங்குளம் 6) தென்திருப்பேரை 7) திருக்கோளுர் 8) ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று இரவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து சேரும்.
இதற்கான பேருந்து கட்டணம் நபர் ஒன்று ரூ.500/- மட்டும் ஆகும். (தொடர்புக்கு: 9487599456, 9488678521)
புறப்பட்டு எனவே முன்பதிவு செய்ய விரும்புவோர், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கட்டணத்தொகையினை முழுமையாகச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள ட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் WWww.tnstc.in மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்சொன்ன 4 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் கீழ்கண்ட வழித்தடங்களிலும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1)திருநெல்வேலி சந்திப்பு - திருவேங்கடநாதபுரம்
2)திருநெல்வேலி சந்திப்பு - கருங்குளம்
3)திருநெல்வேலி சந்திப்பு - எட்டெழுத்து பெருமாள் கோவில்
4)வள்ளியூர் 5)வீரவநல்லூர் திருக்குறுங்குடி - அத்தாளநல்லூர்
எனவே, பக்தர்களும்,பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்