advertisement

உயர் கல்வி பெற விரும்பும் மாணவர் - மாணவியர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ஜூன் 12, 2025 7:32 முற்பகல் |

உயர் கல்வி பெற விரும்பும் மாணவர் - மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உயர் கல்வி உதவிமையம் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார்.

நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர் - மாணவியர்கள் உயர் கல்வியினை தொடர ஏதுவாக தக்க ஆலோசனை வழங்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர் - மாணவியர்கள் உயர்கல்வி ஆலோசனை, உதவி மையம் தொடங்கப்பட்டு 19.05.2025. அன்று முதல் செயல்பட்டு வருகிறது. இப்பணிக்கு பிரத்தேயகமாக இரண்டு தொலைபேசி எண்கள் (04567 - 228016 , 04567 - 228021) செயல்பட்டு வருவதுடன் தகுதியான ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

பெற்றோர்கள், மாணவர் - மாணவியர்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் உள்ள உயர் கல்வி உதவி மையம் அலுவலகத்தில் நேரடியாகவோ தொடர்பு கொண்டு உயர் கல்வி தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு பெற்று பயனடையுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement