advertisement

அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் மூலம் அட்டெண்டன்ஸ் கட்டாயம்-ஒடிசாவில் புதிய விதிமுறை அமல்!

ஜூன் 13, 2025 6:53 முற்பகல் |

 

அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையை அறிந்து கொள்ள புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அவ்வாறு நேரம் தவறி வந்தால் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு சரியான நேரத்துக்கு ஊழியர்கள் வருவதை உறுதி செய்ய புதிய விதிமுறைகளை
ஒடிசா நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை கட்டாயமாக்கி உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் குறித்த நேரத்துக்கு அலுவலகம் வருவதையும், அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதையும் உறுதி செய்ய முடியும். தாமதமாக வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் முக்கியமான காரணங்களுக்காக தாமதமாக வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

ஒடிசா அரசு, அலுவலகங்களில் சரியான நேரத்துக்கு ஊழியர்கள் வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே பயோமெட்ரிக் வசதி இல்லாத அலுவலகங்களில் உடனடியாக நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. NIC உருவாக்கியுள்ள பயோமெட்ரிக் வருகைப் பதிவு இணையதளத்துடன் (Biometric Attendance System Portal) அனைத்து பயோமெட்ரிக் கருவிகளும் இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை, நியமிக்கப்பட்ட அதிகாரி வருகைப் பதிவை ஆய்வு செய்ய வேண்டும்.

புதிய விதிமுறைகளின்படி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும்போதும், வெளியேறும்போதும் பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும். "அலுவலகம் விட்டு வெளியேறும் நேரத்தை பதிவு செய்ய தவறினால், அன்றைய தினம் விடுப்பு எடுத்ததாக கருதப்படும்". ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும். சுழற்சி முறையில் வேலை செய்யும் அலுவலகங்களில், தலைமை அதிகாரி ஊழியர்கள் வேலைக்கு வரும் நேரத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த புதிய விதிமுறைகள் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கும், நிர்வாக திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று அரசு நம்புகிறது. "நல்ல நிர்வாகத்திற்கு நேரம் தவறாமை மிக முக்கியம். எனவே, அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவது மிக முக்கியம்" என்று அரசு தெரிவித்துள்ளது. இது அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பொருந்தும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement