advertisement

அறிவியல் வழி நின்று பதில் சொல்லியிருக்கிறது தமிழர் வரலாறு: அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

ஜூன் 13, 2025 11:15 முற்பகல் |

 

'ஆதாரங்கள் போதவில்லை என்று கேட்ட பலருக்கும், அறிவியல் வழி நின்று பதில் சொல்லியிருக்கிறது தமிழர் வரலாறு' என  அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். கீழடி ஆய்வு குறித்த விரிவான கட்டுரை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையை குட்டிக்குட்டி தங்கம் தென்னரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது X சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:  “கீழடியில் நிலவிய தமிழர் தம் தொன்மை நாகரிகம் பொது யுகத்திற்கு முன்பு ஆறு நூற்றாண்டுகள் பழமையானது (6th Century BCE) என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் இன்றைய செய்தி கட்டுரை ஆய்வறிஞர்களின் கருத்துக்களோடு ஆதாரப்பூர்வமாக நிறுவுகின்றது.

ஆதாரங்கள் போதவில்லை என்று கேட்ட பலருக்கும், அறிவியல் வழி நின்று பதில் சொல்லியிருக்கிறது தமிழர் வரலாறு. வலுவான தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தமிழ் நிலத்தின் தொன்மையை, சிறப்புமிகு வரலாற்றை உலகிற்குப் பறைசாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்த ஆண்டு அகழ்வாய்வுப் பணிக்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 7 கோடியாக உயர்த்தியுள்ளது முதலமைச்சரின் உறுதிப்பாட்டிற்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement