முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள் ?: சீமான் கேள்வி
ஜூன் 14, 2025 10:44 முற்பகல் |
சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது என்று சீமான் கருத்து தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை. தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள். எங்கள் சமயம் சைவம். சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது. தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது. முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துக்கள்