திருநெல்வேலியில் மாபெரும் இரத்ததான முகாம்
உலக இரத்த தினத்தை முன்னிட்டு அன்னை வேளாங்கன்னி பன்நோக்கு மருத்துவமனை, அன்னை வேளாங்கன்னி இரத்த வங்கி மற்றும் ரோட்டரி கிளப் திருநெல்வேலி டவுண் மற்றும் ஸ்டார் கிளைகள் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை ஜூன் 14 ம் தேதி நடத்தினார்கள்.
இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட இரத்த கொடை தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள். இம்முகாமின் சிறப்பம்சமாக இயற்கையை பாதுகாக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை வளாகத்தில் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை இயக்குனர்கள் மரு. ஜிஜி செல்வன், மரு. அந்தோணி ராஜ், மரு. பிரான்சிஸ் ராய், மருத்துவர்கள், ஊழியர்கள், ரோட்டரி கிளப்- திருநெல்வேலி டவுண் & ஸ்டார் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.விழாவில் இரத்ததான கொடையாளிகள், அவர்களின் சங்கத்தினருக்கு பட்டயம் வழங்கி கௌரவிக்க பட்டார்கள்.
கருத்துக்கள்