தூத்துக்குடியில் மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
தூத்துக்குடியில் மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.O தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Advanced CNC பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்
முன்னதாக, பயிற்சி நாட்களில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்த இயந்திர பணிப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப பார்வையிட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதனைதொடர்ந்து, பயிற்சியில் கலந்துகொண்ட பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் / துணை முதல்வர் வேல்முருகன், உதவி இயக்குநர் (பொ), (திறன் மேம்பாட்டுக் கழகம்) செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்