பாளைபுனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா தொடக்கம்
பாளை.கத்தோலிக்க மறை மாவட்ட சேவியர் காலனி புனித அந்தோணியார் ஆலய பெருவிழா கொடியேற்றம், திருப்பலியுடன் தொடங்கியது.
இத்தாலி பதுவா நகரில் அந்தோணியார் தனது வாழ்நாளில் மக்களின் நோய்களை குணப்படுத்துதல், உறுப்புகளை இழந்தவர்களுக்கு உறுப்புகளை உடலுடன் பொருத்துதல், மரணித்தவர்களை உயிர்ப்பித்தல் போன்ற அற்புதங்களை நிகழ்த்தினார். அத்தகைய ஆற்றல் மிக்க அற்புதங்களை நிகழத்திய அந்தோணியார் இறந்த நாளான ஜூன்13 ந்தேதி கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கி அவரை உயிர்ப்பித்த நாளான ஜூன், 13ஐ நினைவு கூறும் வகையில் பாளை. சேவியர் காலனி புனித அந்தோணியார் ஆலய பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் பெருவிழாவின் தொடக்க நாளான நேற்று(13-06-2025) வெள்ளிக்கிழமை பாளை. தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆல்பர்ட் ஜோசப் கொடியேற்றி வைத்தார். ஜேசு சபை குழு குருவானவர் அலெக்ஸ் யாகு தலைமையில் குழு குருக்கள் திருப்பலி நடத்தினர். இந்த திருப்பலி பிரார்த்தனையில் பாளை கத்தோலிக்க மறை மாவட்டம், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம், கோட்டாறு மறை மாவட்டம் மற்றும் குழித்துறை மறை மாவட்ட பெரு மக்கள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். முதல் நாள் விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் அசனம் நடைபெற்றது.
இந்த 10 நாட்கள் பெருவிழாவில் வருகிற 17ந்தேதி செவ்வாய் கிழமை அந்தோணியார் சப்பர பவனியும், வருகிற 20ந்தேதி வெள்ளிக்கிழமை திறந்த ஜீப்பில் அந்தோணியார் நற்கருணை பவனியும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை பாளை. சேவியர் காலனி அந்தோணியார் ஆலய பங்கு தந்தை அருள்திரு. சைமன் செல்வன், பங்கு பேரவை தலைவர் அன்னராஜா மற்றும் புனித சேவியர் காலனி பங்கு அருட்பணி பேரவை இரு பால் துறவிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர். வருகிற 22ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆண்டு பெருவிழாவுடன் 10 நாட்கள் விழா நிறைவு பெறுகிறது.
கருத்துக்கள்