advertisement

அன்புமணியைப் பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது” - ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜூன் 14, 2025 6:17 முற்பகல் |

 

 அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வருகிறார். ஆனால், நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே இருக்கிறது என்று அன்புமணி கூறி ராமதாஸின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார். 

பாமகவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவில் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “2026 தேர்தலுக்குப் பிறகு கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சு காற்று வரை இருக்கும் வரை தலைவர் பதவியை அவருக்கு கொடுக்க மாட்டேன். நான் ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால், மாநாட்டிற்கு பிறகு நடக்கின்ற செயல்களை பார்க்கும் போது மிக மிக வருத்தமாக இருக்கிறது. இந்த கட்சியில் கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் எனக்கு ஆதரவு வருகிறது. தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை கொடுக்கிறேன் என்று சொன்னதற்கு,100க்கு 99% சதவீதம் பேர் கடைசி வரை நான் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த 1 சதவீதத்தை அவரின் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டேன். 

 தந்தை தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். பா.ம.க சொந்தங்களே என்று சொல்லும் எனக்கு ஏற்படுகின்ற பூரிப்பு, ஆனந்தம் அதை சொல்லி மாளாது. ஆனால், இவரை பார்க்கும் போது அதிர்ச்சி, மனகுமுறல்கள் ஏற்படுகின்றது, பிபி (BP) ஏறுகிறது. இந்த கட்சியை சுயமாக உருவாக்கிய என்னை, மைக்கை வைத்து பேசக்கூடாது என்று சொன்னார். கட்சியின் நிறுவனரையோ இப்படி சொல்கிற அதிகாரத்தை நான் கொடுக்கவில்லை. அதனால், என் மூச்சு காற்று இருக்கும் வரை நான் நிறுவனர், தலைவர்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement