advertisement

தூத்துக்குடி மாவட்ட 4 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை கிராம சபைகூட்டம்

ஜூன் 13, 2025 10:33 முற்பகல் |

 


தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும் வென்றான் கிராம ஊராட்சி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு கிராம ஊராட்சி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் விட்டிலாபுரம் கிராம ஊராட்சி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஜூன் - 6ம் தேதி முதல் 13ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இதில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ஜெயராஜ் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதில் வட்டார வள பயிற்றுநர் ஆறுமுகசாமி சமூகதணிக்கை கிராம வள பயிற்றுநர்கள் தனலட்சுமி, ஜெயபாலா, முத்து செல்வி, ராமலட்சுமி, சண்முக பிரியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னலட்சுமி, உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement