advertisement

கட்டணமில்லாமல் விடுதிகளில் தங்கி படிக்கலாம்: ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

ஜூன் 13, 2025 5:04 முற்பகல் |

 

விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கிப் பயில்வதற்கு ஆர்வமுள்ள மாணாக்கர் விண்ணப்பிக்க தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நலத்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

2025-2026 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளி / ஐடிஐ/டிப்ளோமா/கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கிப் பயில்வதற்கு ஆர்வமுள்ள மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் 10.06.2025 முதல் பெறப்படுகிறது. ஆர்வமுள்ள மாணாக்கர்கள் https://nallosai.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கு மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும், மாணாக்கர் மத்திய/மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தங்கிப்பயில வேண்டும். மாணாக்கர்கள் கூடுதல் தகவல்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை அலுவலக நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 06 மணி வரை) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement