advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் 24 ம் தேதி திருநங்கைளுக்கான சிறப்பு முகாம்

ஜூன் 14, 2025 2:59 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருநங்கைளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைள்/திருநம்பிகள்/இடைப்பாலினர்களின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை பெறுதல் ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை பெறும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 24.06.2025 அன்று நடைபெற உள்ள திருநங்கையர் சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைள்/திருநம்பிகள்/ இடைப்பாலினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement