சென்னை : அரசு மருத்துவமனையில் மருத்துவர் வேடமிட்டு பெண் நோயாளியிடம் நகை பறிப்பு!
ஜூன் 14, 2025 3:20 முற்பகல் |
சென்னையில் மருத்துவர் வேடமிட்டு பெண் நோயாளியிடம் நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி தமிழக அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்த பெண் நோயாளி ஒருவர் வந்துள்ளார்.அப்போது கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு தன்னை மருத்துவர் போல காட்டிக் கொண்டு வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண் நோயாளி அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி உள்ளார்.இதனை சற்றும் எதிர்பாக்காத அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், இது குறித்து செய்தி ஊடகங்களுக்கும் பேட்டி அளித்துள்ளார்.
கருத்துக்கள்