advertisement

பரமக்குடியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

ஜூன் 12, 2025 8:48 முற்பகல் |

பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 13-ந்தேதி நடைபெறுமென பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் தலைமையில் பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் வரும் 13.06.2025. (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.க்ஷமேற்படி கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கூட்டத்தில் விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாமென பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement