தூத்துக்குடியில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஜூலை 17, 2025 10:57 முற்பகல் |
தூத்துக்குடியில் கொலை முயற்சி - கொலை மிரட்டல் வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 01.06.2025 அன்று இளைஞர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிதங்கம் (24) என்பவரையும்,
கடந்த 17.06.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் வழக்கில் அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (21) என்பவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர்இளம்பகவத் உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துக்கள்