advertisement

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா

ஜன. 27, 2025 8:52 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் குடியரசுத் தின விழா எழுச்சிமிகு கோலாகலமாக நடைபெற்றது.32-வது வார்டு உறுப்பினர் மு.வடமலையான் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்தியாவின் 76 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் எழுச்சியோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மாமு வளாகம் முன்பு தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் அ.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.குணாளன்,சங்க மாவட்ட தலைவர் பா.தனசேகர், சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட துணைத் தலைவர் குயின் எம். இப்ராஹிம்ஷா அனைவரையும் வரவேற்றார்.

பரமக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் எ.வி. முத்தரசன் தேசிய கொடியேற்றி வைத்து கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களது அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சாதி, மதம், மொழி கடந்து இந்திய மக்கள் கொண்டாடும் தேசிய விழாவாக குடியரசுத் தினம் ஆகுமென விளக்கமாக டாக்டர் எ.வி. முத்தரசன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகராட்சி 32-வது வார்டு உறுப்பினர் மு. வடமலையான் பேசியதாவது :   செய்தியாளர்கள் மக்கள் நலனில் அக்கரையோடு செயல்படுவர்கள். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் குடியரசு தின விழாவை மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

எனது வார்டு பகுதியான இந்த இடத்தில் வருங்காலங்களில் நடைபெறும் இது போன்ற கொடியேற்றும் விழாவிற்கு முன்பாக எனது சொந்த நிதியின் மூலம் மிக உயரமான அளவில் கொடிகம்பம் வழங்குவதுடன் சிறப்பாக விழாக்கள் நடைபெறுவதற்கும் உறுதுணையாக இருப்பேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாமு நினைவு அறக்கட்டளை பொருளாளரும், ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அதிகாரி மா.மு.மணவாளன், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிர்வாகிகள் அ.சம்சுதீன், என்.சீனி முகமது, எஸ்.அப்துல் லத்தீப், எஸ். அம்ஜத் அலி, காதர் அலி, தினசரி நாளிதழ் நிர்வாக அலுவலர்கள் ச. அஹமது ரியாஸ், ஐ. இஸ்லாம் நூருதீன், தினசரி நாளிதழ் முன்னோடி செய்தியாளர் திலீப் குமார், தொலைக்காட்சி செய்தியாளர்கள் சபரிநாதன், மாரிமுத்து. ஜெகதீசன், நாளிதழ் சிறப்பு செய்தியாளர் சி. செல்வராஜ், மணற்சிற்ப கலைஞர் ஆசிரியர் சரவணன் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சங்க மாவட்ட பொருளாளர் என்.செய்யது அப்தாஹீர் நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement