தூத்துக்குடியில் ஜூன் 11ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து
ஜூன் 08, 2025 12:47 முற்பகல் |
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 11ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற ஜூன் 11 ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
இதனால் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்