advertisement

சேர்வைக்காரன்மடத்தில் நூறுநாள் திட்டத்தில் முறைகேடு - முன்னாள் உபதலைவர் பரபரப்பு புகார்

ஜூன் 08, 2025 12:59 முற்பகல் |

சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நூறுநாள் திட்டத்தில் மாபெரும் முறைகேடு மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம்ஊராட்சி முன்னாள் உபதலைவர் முதலமைச்சர் தனி பிரிவுக்கு அளித்துள்ள கோரிக்கை மனு வானது  முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எமது ஊராட்சி சுமார் ஏழு கிராமங்களை உள்ளடக்கியது.சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், சிவஞானபுரம் சக்கம்மாள்புரம், செந்தியம்பலம்,காமராஜர் நகர்,நம்மாழ்வார் நகர் போன்ற குக்கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்.மேற்படி எமது ஊராட்சிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம்  அரசு மக்களுக்கு பல பணிகள் செய்ய ஆவணம் செய்துள்ளது.இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை செய்யாமல் முறைகேடாக அரசு பணத்தை வழங்கி இன்று வரை பல பணிகள் செய்து முடிக்கவில்லை. 

சேர்வைக்காரன்மடம்கிழக்கு தெரு சிமெண்ட் சாலை இந்த சாலை கடந்த  2019 ம் ஆண்டு அரசு ஆணை அளித்து சுமார் 30,912 ரூபாய் வேலை செய்தவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இது வரை வேலை பணிகள் கடந்த 5 வருடமாக செய்து முடிக்கபடவில்லை.நான் ஊராட்சி உபதலைவராய் இருக்கும் போது மேற்கண்ட பணிகளை செய்ய மனு அளித்தேன்.வேலை நடைபெறுவதாக எனக்கு பதில் அளித்துள்ளார்கள்.ஊராட்சி தலைவர் காலங்களுக்கு பிறகு இந்த பணிக்கு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 31/1/2025 அன்று ஜேக்கப் மூலக்கரை என்ற பெயரில் பில் எண் 1)1,92509 ரூபாய் மற்றும் பில் எண் 2)31,347.26  பணம் வழங்க வைக்கப்பட்டுள்ளது.இதற்கு ஊராட்சி பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் தேசிய அளவிலும் மனு அளிக்கபட்டு இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.இந்த சாலையும் அமைக்கப்படவில்லை. 

B)தங்கம்மாள்புரம் இடுகாட்டுக்கு எதிரேபுல எண் 83/6 இல் வாலிபர்களுக்கு விளையாட்டு உடற்பயிற்சி உபகரணங்கள் கொண்ட மையம்(.   2927001019/AV/2905258100
Servaikaranmadam 23 24 Const of Play Ground C Category 2 Sports and 2 bars atThangammalpuramSur 83/6) அமைக்க கடந்த  2024 ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கபட்டு சுமார் 64 நாட்கள் நூறுநாள் திட்ட வேலையாட்கள் மூலம் பணி நடைபெற்றதாக ரூபாய் 20416 அளிக்கப்பட்டு இன்று வரை எந்த வேலையும் செய்யப்படவில்லை.மாறாக செய்யாத வேலைக்கு 9/5/2025 அன்று பில் மூலம் ரூபாய்  1,40,80  ஒப்புதல் வைக்கப்பட்டுள்ளது. இது போல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசு ஒப்புதல் அளித்த நம்மாழ்வார் நகர் பிரதான சிமெண்ட் சாலை மற்றும் தங்கம்மாள்புரம் பஸ்ஸாண்டு பின்புறம் உள்ள சாலையும் பணிகள் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் சென்ட்ரல் பாங்க் அக்கவுண்ட் மூலம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த வேலை சுமார் 4 மாதமாகியும் பணிகள் ஆரம்பிக்கபடவில்லை.   

C)கடந்த 15 வருடமாக சாலை அமைக்காமல் பல போராட்டங்களுக்கு கட்ந்த 2023 அமைக்கப்பட்ட ஒடக்கரை சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டு அதன் அறிவிப்பு பலகை சுவற்றில் எழுதப்பட்டு அதை சுட்டிகாட்டின பிறகு போர்டை மற்றும் அமைந்துவிட்டு அதன் முன் கடைசி பகுதியில் தரமான பொருட்கள் அளிக்காமல் சாலை இன்று வரை ஜல்லி தெருவும் அளவிற்கு அலங்கோலமாக உள்ளது.இன்று வரை எந்த நடவடிக்கை இல்லை.மேலும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 6 இலட்சம் மதிப்புள்ள  அமைக்கப்பட்ட புதுமனை சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டு பின் தொடர் மனு அளித்த நிலையில் தற்போது சீரமைக்கபட்டு வருகிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் தொடர்ச்சியாக எம் மக்களுக்கு அரசு அளிக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் அரசு பணத்தை வீணடித்து பணிகளை செய்யாமல் முறைகேடாக பில் வைத்து அரசு பணத்தை அபகரிக்கும் நோக்கில் இதன் பொறுப்பாளர்கள் செயல்பட்டு வரும் நிலையில் உள்ளது.

எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும்.மற்றும் எம் மக்களுக்கு அளிக்கும் அரசு திட்டத்தில் மூலம் வேலை செய்யாமல் பணத்தை எடுக்க முயற்சி நடைபெறுகிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.மேற்படி சாலை அமைக்காமல் ,அமைக்கப்பட்ட சாலை தரமற்றதாக வேலை நடைபெற்று அரசு பணத்தை வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேற்படி எம் மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேற்கண்ட சாலைகள் மற்றும் பணிகளை உடனடியாக செய்து அரசு எமது ஊராட்சி மக்களுக்கு அளித்த பயன்களை செயல்படுத்த வேண்டும்.மேலும் கடந்த 5 வருடமாக தங்கம்மாள்புரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறக்கப்படவில்லை.

மேற்படி தனது கடமைகளை சரிவர செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது அரசு ஊழியர் விதிமுறை நடவடிக்கை எடுத்து எம் ஊராட்சியில் இருந்து பணிமாற்றம் செய்யவைண்டும். எம் மக்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்கள் முழூமையாக செல்ல வழிவகை செய்யவேண்டும்..கட்ந்த 28/5/2025 அன்று முறைகேடாக சக்கம்மாள்புரம் மேல்நிலை தேக்க தொட்டியில் இருந்து எந்த வீடும் இல்லாத கல்லறை தோட்டத்திற்கு பைப் லைன் அமைத்து கொடுத்து உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருமதி.ஏஞ்சலின் ஜெனிட்டா மனு அளித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement