advertisement

தேனிலவுக்கு கூட்டி சென்று கணவனை கொன்ற மனைவி

ஜூன் 09, 2025 8:23 முற்பகல் |

 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 29 வயது ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் மேகலாயாவுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் காவலர்களிடம் புகார் அளித்தனர்.இதன் நடுவே, ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் காவலர்களிடம் சரணடைந்தார்.இதில் தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement