தூத்துக்குடி சிவன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
ஜூன் 09, 2025 6:02 முற்பகல் |
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமான் பிறந்த விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு வைகாசி விசாகத் திருவிழா முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் இன்று சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கருத்துக்கள்