advertisement

பெண் கொலை வழக்கில் 4பேரை கைது செய்த தனிப்படை :தூத்துக்குடி எஸ்பி., பாராட்டு

ஜூன் 09, 2025 11:03 முற்பகல் |

 

பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்துவந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி 4பேரை கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.

நாலாட்டின்புதூர் பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளை கடந்த (07.06.2025) கைது செய்தனர்.

மேற்படி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த மேற்படி தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (ஜூன் 9) சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement