advertisement

ஆய்க்குடியில் நூல்வெளியீட்டு விழா!

ஜூன் 09, 2025 11:11 முற்பகல் |

 

ஆய்க்குடியில் நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது.

சங்க காலம் முதற்கொண்டு ஆயக்குடி பல்வேறு சிறப்புக்களையும் பெருமைகளையும் கொண்டு விளங்கும் .  இவ்வூரில் 19 கூட்டப் பங்காளிகளையும் ஒருசில குடும்பங்களையும் கொண்ட தேவேந்திரகுல வேளாளர்களின் சமூகபண்பாடு, கலாச்சாரம்.தொழில் வாழ்வியல் சடங்குகள்‌ மற்றும் திருவிழாக்கள் போன்ற பாரம்பரியமிக்க தொன்மையான நீண்டநெடிய 500 ஆண்டுகால வரலாற்றினை தொகுத்து10 தலைமுறைக்கு கொடிவழிதொடருடன் ஒரு ஒப்பற்ற புத்தகத்தை எழுதி முடித்து  ஆயக்குடி பத்ரகாளி அம்மன் கோயில் பாரதி கலையரங்கில்
கேப்டன். டாக்டர். ராமகிருஷ்ணன் மருத்துவ நலபணிகள் கூடுதல் இயக்குநர் ஓய்வு தலைமையில் 
சிறப்பு விருந்தினர் பேச்சிமுத்து  முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் தியாகராசர் கல்லூரி மதுரை நூலினை வழங்க, கிருஷ்ணன் அரசு கலைக் கல்லூரி முதல்வர்  பரமசிவம்  அவர்களும் பெற்றுக்கொள்ள நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. நூலாசிரியர்சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஏற்புரை நிகழ்த்த விழா இனிதே நிறைவு பெற்றது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement