advertisement

பெங்களுரு துயர சம்பவம் - சின்னச்சாமி மைதானத்தை மாற்ற பரிசீலனை

ஜூன் 09, 2025 8:12 முற்பகல் |

ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை இம்முறை வென்றது. இதையடுத்து ஆர்சிபி அணிக்கு பிரம்மாண்டமாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் காவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கடுமையாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement