advertisement

மக்களின் நல்வாழ்வுக்காக அன்னையிடம் பிரார்த்தனை - அமைச்சர் அமித்ஷா பதிவு

ஜூன் 09, 2025 5:05 முற்பகல் |

 

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரிசனம் செய்தார்.

பா.ஜ., மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு தனி விமானத்தில் அமித்ஷா மதுரை வந்தார். ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியவர், நேற்று காலை 11:52 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. அம்மன், சுவாமி சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனை செய்தார். முப்பது நிமிடங்களுக்கு பின் மதியம் 12:22 மணிக்கு அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்ததில் மகிழ்ச்சி. நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், நம் குடிமக்களின் நல்வாழ்விற்கும் அன்னையின் ஆசிகளைப் பெற்று பிரார்த்தனை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement