advertisement

புளியங்குடியில் பிரம்மாண்ட பக்ரீத் வழிபாடு

ஜூன் 07, 2025 10:36 முற்பகல் |

 

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் சார்பாக பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகளில் 2000 பேர் பங்கேற்றுத் தொழுகையில் ஈடுபட்டனர். புளியங்குடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்ட முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்துவிட்டு நறுமணம் பூசி தொழுகைக்காகத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.தொடர்ந்து காலை பள்ளிவாசல் முன்பு பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்புத் தொழுகையை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார். இதில் 2000 இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்துகொண்டனர்.
தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்துகொண்டு பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement