தமிழக மக்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" -இபிஎஸ்க்கு கனிமொழி பதிலடி!
தொகுதி மறுவரையரறை விவகாரத்தில், இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இவருக்கு பதிலடி கொடுத்து திமுக எம்பி கனிமொழி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட அரசியல் பிழைக்காக, சொந்த மாநில நலன்களை கைவிட்டு, டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவர், தங்களுக்கு போதிக்க எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள் - எங்கள் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுகிறீர்கள். அச்சுறுத்தல் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. டெல்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது. தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசமைப்பு தீர்வையே நாங்கள் கோருகிறோம். மேலும், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், அரசமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை குரல் எழுப்புவோம். நீங்கள் விற்றுவிட்டீர்கள். நாங்கள் மாட்டோம்.” என்று
எடப்பாடி பழனிசாமியின் அமைச்சர் ரகுபதி அளித்துள்ள பதிலில் ” கமலாலயத்தில் குரலாக பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும். தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அதிமுக பதிவு செய்துள்ளதா?.. பாஜகவோடு கூட்டணி இல்லை என பேசி வந்த அதிமுக, அப்படியே நிலைப்பாட்டை மாற்றி கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போல தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்