advertisement

கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு வழிபாடு - ஆயிரக்கணக்கானோர்  தொழுகை

ஜூன் 07, 2025 10:18 முற்பகல் |

 

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் திரண்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் இளங்கடை, பாபா காசிம் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.
மேலும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி, இனிப்புகள் வழங்கி, பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். குமரியில் வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, அதனைப் பின்பற்றி குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் நேற்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement