advertisement

ராஜஸ்தானில் துப்பாக்கி காட்டி மிரட்டி 14.5 லட்சம் மதிப்புள்ள மாலை திருட்டு...!

ஜூன் 05, 2025 12:01 பிற்பகல் |

 

ராஜஸ்தானில் கடந்த 1-ந்தேதி அன்று நடைபெற்ற திருமணத்தில், மணமகனுக்கு மாலையிடுவதற்காக 500 ரூபாய் மதிப்புள்ள 3000 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த மாலையை அரியானாவிலிருந்து வாடகைக்கு எடுத்துள்ளனர். இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு அதனை உரிமையாளரான ''ஷாத்'' இருசக்கர வாகனத்தில் அரியானாவிற்கு எடுத்து சென்று கொண்டிருந்தார்.

இந்தத் தகவலை அறிந்த மர்மநபர்கள் காரில் வந்து இருசக்கரவாகனத்தின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷாத்தை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டி மாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக 'ஷாத்' அளித்த புகாரின் பேரில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement