advertisement

தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

ஜூன் 06, 2025 11:33 முற்பகல் |

 


தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் மதிகட்டான் ஓடை அருகே கடந்த 07.05.2025 அன்று முக்காணி குருவித்துறை பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பொங்கல்ராஜ் (43) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் குருவித்துறை பகுதியை சேர்ந்தவர்களான மாசாணமுத்து மகன் புலமாடமுத்து (32), சங்கர் மகன் ஜெயராஜ் (21) மற்றும் மாரிமுத்து மகன் நாகராஜன் (19) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 54 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement