advertisement

மாநிலங்களவை தேர்தல்! வேட்பு மனு தாக்கல் செய்த  கமல்ஹாசன்...!

ஜூன் 06, 2025 10:19 முற்பகல் |

 

வருகிற 19-ந்தேதி, தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வரும் திங்கட்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்கள், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தி.மு.க. வேட்பாளர்களாக,எஸ்.ஆர்.சிவலிங்கம், பி.வில்சன், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.மேலும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, இன்று தி.மு.க. வேட்பாளர்கள் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement