பெற்ற மகளை காதலனுக்கு இரையாக்கிய தாய் கைது!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில்13 வயது மகளை காதலன் மற்றும் உதவியாளருக்கு பாலியல் இரையாக்கிய பாஜக பெண் தலைவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அனாமிகா பாஜக பெண் தலைவர் ,இவருக்கு கணவர் மற்றும் 13 வயது மகள் உள்ளார்.ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பகுதியில் பாஜக பாஜக தலைவராக இருந்துவந்த அனாமிகா தனது காதலனும் அவரது உதவியாளரும் தனது 13 வயது மகளை பலமுறை கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.
சிறுமி தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறியதைத் தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து இந்த சம்பவம் ஜூன் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போது சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாஜக தலைவர் அனாமிகா சர்மாவும் அவரது காதலன் சுமித் பட்வாலும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டனர்.பட்வாலின் கூட்டாளியான சுபம் மீரட்டின் ஷாபூரில் கைது செய்யப்பட்டார்.பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்த அனாமிகா கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கருத்துக்கள்