கொள்ளையடிக்க நாங்கள் அரசியலுக்கு வரவில்லை - புஸ்ஸி ஆனந்த பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியாதவது:
இளைஞர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு. கடந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எல்லோரையும் பார்த்துவிட்டீர்கள். இந்த முறை ஒரே ஒரு வாய்ப்பு கொடு என்று தான் கேட்பார்கள். 32 ஆண்டுகளாக விஜய் உச்சத்தில் இருக்கிறார். அந்த உச்சத்தை மக்களாகிய நீங்கள் கொடுத்தீர்கள். அந்த உச்சத்தில் இருக்கும்போதே மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். ரிட்டையர்மென்ட் ஆகிவிட்டு அரசியலுக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணத்திற்கு மேல் எங்களுக்கு எந்தவொரு ஆசையும் இல்லை. தலைவர் விஜய் அவர்கள் 2026-இல் அந்த இடத்தை அடைய வேண்டும் என்பதும், ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் எல்லோரது எண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 05 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி அடிச்சுகிட்டு ஜெயிலுக்குப் போக நாங்கள் வரவில்லை. எங்களுக்கு காலையில் ஒரு 05 இட்லி, மதியம் கொஞ்சம் சாதம், இரவு ஒரு 5 இட்லி இருந்தாலே அது எங்களுக்கு போதும். எவ்வளவோ ஏழை மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.
கருத்துக்கள்