ஆழ்வார்குறிச்சி : அரசுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
தென்காசி மாவட்டம்ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ வேளாளர் சங்கத்தில் வைத்து அரசு தேர்வு எழுதிய பத்தாம் வகுப்புபதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அரசுத்தேர்வில் 80% விழுக்காடு மற்றும் அதற்கு மேல் எடுத்தநம் கீழத்தெரு சைவ வேளாளர் சங்ககுழந்தைகளை வாழ்த்து பாரட்டு விழா
சங்க தலைவர சைவத்திரு ம.சங்கரநாரயணன் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது
சைவத்திரு. பி.ராமையா பிள்ளை உப தலைவர், சைவத்திரு இ.குமார் பிள்ளை முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில மண்டல துணை செயலாளர், தென்காசி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ வேளாளர் சங்க செயலாளர் ஆ.சை.மாணிக்கம் பிள்ளை வரவேற்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்/11ஆம் வகுப்பு மகாலட்சுமி.10ஆம் வகுப்பு சக்தி ,இசக்கியம்மாள் இந்த மூன்று மாணவ,மாணவிகளுக்கு சுந்தரம்.செயலர் ஸ்ரீ பரமகல்யாணி மேல் நிலை பள்ளி சங்க தலைவர் சங்கரநாரயணன்.கௌரவ ஆலோசகர் நல்லாசிரியர் மாடசாமி, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்சைவத்திரு ராமலிங்கம் குழந்தைகளுக்கு ஷீல்டு மற்றும் மகாகவி பாரதியார் கவிதை புத்தகம் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.
முருகன் பிள்ளை,குமார் பிள்ளை செயற்குழு உறுப்பினர்கள் சைவத்திரு ந.சுப்பிரமணியன் பிள்ளை,சாய் சுப்பிரமணியன் பிள்ளை உட்பட சங்க உறுப்பினர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள் சாவத்தூர் சங்க மேனாள் தலைவர் ஆறுமுகம் பிள்ளை மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்
உப தலைவர் ரா.முத்து பிள்ளை நன்றியுரை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கபட்டது.
கருத்துக்கள்