advertisement

ஜூன் 10-ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு

ஜூன் 07, 2025 3:47 முற்பகல் |

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, எதிர்வரும் 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

அத்துடன், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மறுநாள், இடி மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எதிர்வரும் 10-இல் கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,12- ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேப்போல தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட, 03 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement