கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம்கள்: எப்போது, எங்கே நடைபெறும்?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம்கள் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்தபடி முகாம்கள் பல இடங்களில் நடைபெறவில்லை. எப்போது முகாம்கள் நடைபெறும் என்று விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்கள் எப்போது?
தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் நடைபெறும் என்றும், இணையாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அரசு அறிவித்த ஜூன் 4ஆம் தேதி பல இடங்களில் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும், இ சேவை மையங்களிலும் அணுகி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கோரினர். ஆனால் தங்களுக்கு இன்னும் இது தொடர்பான அறிவிப்பு வரவில்லை என்று கூறினர். இ சேவை மையங்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘அரசு தரப்பிடமிருந்து இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு வாரம் கழித்து தொடர்பு கொள்ளுங்கள்’ என்று கூறினர். தமிழக அரசு விண்ணப்ப பதிவு முகாம் தொடர்பாக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கருத்துக்கள்