advertisement

வெற்றி விழா பெருந்துயரம்! ஆர்சிபி அணி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு!

ஜூன் 06, 2025 2:48 முற்பகல் |

 

2025 ஐபிஎல் இறுதியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆர்சிபி அணிக்காக பெரும் வெற்றி விழா ஏற்பாடாகியிருந்தது. விதான சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை வெற்றி பேரணி திட்டமிடப்பட்டிருந்தாலும், பின்னர் பாதுகாப்பு காரணமாக அதற்கு தடை விதிக்கப்பட்டது.

விதான சவுதாவில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சின்னசாமி மைதானத்தில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில், நுழைவாயிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்துக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை தான் காரணம் என எதிர்க்கட்சி பாஜக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், விழா முன்னோட்டம் குறித்து காவல்துறையுடன் ஆலோசிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஆர்சிபி, நிகழ்ச்சி மேலாளர் டிஎன்ஏ, மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர்மீது கப்பன் பார்க் போலீசில் ஐந்து பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement