விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு - சென்னையில் மட்டும் 230 காலிப்பணியிடங்கள்
AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை, வதோதரா, அமிர்தசரஸ் ஆகிய பகுதியில் உள்ள பாதுகாப்பு ஸ்கிரீனர் (Security Screener) பதவிக்கு 227 காலிப்பணியிடங்கள், பாட்னா, விஜயவாடா, வதோதரா, போர்ட் பிளேயர், கோவா, சென்னை ஆகிய இடங்களில் உள்ள பாதுகாப்பு பிரிவு உதவியாளர் (Assistant)166 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Freshers இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம். இதில் சென்னையில் மட்டும் 230 காலிப்பணியிடங்கள் உள்ளன.
AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பாதுகாப்பு ஸ்கிரீனர், பாதுகாப்பு உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.06.2025 தேதியின்படி, அதிகபடியாக 27 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
பாதுகாப்பு ஸ்கிரீனர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஒபிசி பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 60% மதிப்பெண்களுடன், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள். பாதுகாப்பு ஸ்கிரீனர் பதவிக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும்.உதவியாளர் பதவிக்கு முதல் வருடம் மாதம் ரூ.21,500 சம்பளம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும்.இவையில்லாமல் கொடுப்பனை, அகவிலைப்படி ஆகியவை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணல்/ அடுத்தக்கட்ட தேர்வு குறித்த அழைப்பு விடுக்கப்படும். இமெயில் முகவரி மூலம் தகவல்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.aaiclas.aero/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, கல்வித்தகுதி சான்றிதழ், வகுப்பு பிரிவு சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் ஆகிய விவரங்களிடன் விண்னப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்படுபவர்கள் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரு.750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கும் நாள் - 09.06.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.06.2025
நேர்காணல் - பின்னர் அறிவிக்கப்படும்.
கல்லூரி படிப்பு, பள்ளி படிப்பை முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். மத்திய அரசு கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் மூலம் விமான நிலையங்களில் கார்கோ பிரிவில் பணியாற்றலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
கருத்துக்கள்