ஐஐடி செல்லும் பழங்குடியின மாணவி.. “உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்” – முதலமைச்சர் அறிவிப்பு
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, IIT-யில் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது உயர்கல்வி செலவை அரசு ஏற்கும் என அறிவித்துள்ளார்.
அரசு பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளியில் பயின்று IIT-யில் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்,இந்நிலையில் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்.அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஸ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்துக்கள்